Published : 11 Jan 2017 08:51 AM
Last Updated : 11 Jan 2017 08:51 AM
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மதுரையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து நேற்று 2-ம் நாளாக பேரணி நடத்தினர்.
பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக் கட்டு நடத்த அனுமதி கோரி பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் மதுரை கோரிப்பாளையத்தில் ஏராள மானோர் திரண்டு, பேரணி நடத்தி, ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் நேற்று, மதுரை கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு திருப்பரங்குன்றம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஜெய்ஹிந்த் புரம், ஜீவா நகர் உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் வழியாக பேரணியாகச் சென்ற மாணவர்கள், மீண்டும் பிரதான சாலைக்கு வந்து மத்திய அரசு, பீட்டா அமைப்பை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
சட்டக் கல்லூரி மாணவர்களும் கல்லூரியைப் புறக்கணித்து மாவட்ட நீதிமன்றம் வரை பேரணியாக சென்ற னர். அங்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக கோஷங்களை எழுப்பினர்.
இன்று அனைத்துக் கல்லூரி மாண வர்களும் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனர். மதுரை புதூர், காளவாசல் பகுதியில் இருந்து ஊர்வலமாக செல்லவும் திட்டமிட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யவும், கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT