மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஜன.20 முதல் விருப்ப மனு: திமுக அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஜன.20 முதல் விருப்ப மனு: திமுக அறிவிப்பு
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோர் இம்மாதம் 20-ம் தேதி முதல்வ விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்போருக்கான விண்ணப்பப் படிவங்கள் வரும் 20-ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.

இதில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களது விருப்ப மனுவை பூர்த்தி செய்து, வரும் 30-ம் தேதி அன்று மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் அளிக்க வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தொகுதி விண்ணப்பம் ரூபாய் 25,000 எனவும், மகளிர் மற்றும் தனித்தொகுதி விண்ணப்பம் ரூபாய் 10,000 எனவும் அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in