தமிழக மீனவர் மீது இலங்கை மீனவர் தாக்குதல்

தமிழக மீனவர் மீது இலங்கை மீனவர் தாக்குதல்
Updated on
1 min read

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர் களை இலங்கை மீனவர்கள் தாக்கி உள்ளனர்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி பெருமாள்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில் முகாமிட்டு, மீன் பிடித்து வரு கின்றனர். இந்த மீனவர்கள் தங்களது பைபர் படகுகளில் கோடியக் கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லைக்குள் நேற்று முன் தினம் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, 10-க்கும் மேற்பட்ட படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் ஆயுதங்களைக் காட்டி மிரட்டியும், கற்களால் தாக்கியும் தமிழக மீனவர்களை விரட்டினர்.

மேலும், பெருமாள்பேட் டையைச் சேர்ந்த பன்னீர்செல் வம்(36). அதே ஊரைச் சேர்ந்த சின்னையன்(52) ஆகியோருக்கு சொந்தமான 2 பைபர் படகுகளையும் மறித்து, அதில் ஏறிய இலங்கை மீனவர்கள் அந்தப் படகுகளில் இருந்த தமிழக மீனவர்களைத் தாக்கி, வலைகள், செல்போன்கள், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.

இதனால், தகவல் தொடர்புகள் எதுவும் இல்லாத நிலையில் நடுக்கடலில் தத்தளித்த 2 படகு களைச் சேர்ந்த மீனவர்கள் கோடி யக்கரை திரும்பினர். இதுகுறித்து கடலோரக் காவல் குழும போலீ ஸார், மீன்வளத்துறை அதிகாரி களிடம் புகார் அளித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in