

மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தி வருவதற்காக, சென்னை மாநகராட்சிக்கு மத்திய ஊரக வளர்ச்சி துறை விருது வழங்கியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது:
சென்னையில் இந்திய சாலை போக்குவரத்து கழகத்தின் விதிகளுக்கு உட்பட்டு 26 பேருந்து சாலைகளில் புதிய நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது போன்று மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்க சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் பரிந்துரைகள் படி சென்னை மாநகராட்சி பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற ஏழாவது நகர்ப்புற இயக்க இந்தியா மாநாட்டில் விருது வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.