Published : 19 Nov 2014 09:53 AM
Last Updated : 19 Nov 2014 09:53 AM
2014-ம் ஆண்டுக்கான விஷ்ணு புரம் விருதுக்கு கவிஞர் ஞானக்கூத்தன் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் வாசக நண்பர்களால் 2009-ம் ஆண்டு கோவையை தலைமை யிடமாகக் கொண்டு விஷ்ணு புரம் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உலகெங்கிலும் உள்ள நவீனத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தா ளர்கள், கவிஞர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், சிந்தனை யாளர்கள், இசைக் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், திரைத் துறையினர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தமிழின் மூத்த படைப் பாளிகளை கவுரவிக்கும் வகையில் ‘விஷ்ணுபுரம் விருது’ 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, பாராட்டுக் கேடயமும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் உள்ளடக்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT