Published : 26 May 2017 12:23 PM
Last Updated : 26 May 2017 12:23 PM
மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.
இதுகுறித்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் காங்கிரஸ் தலைமையகத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசியபோது, "மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. நாட்டு மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. மக்கள் மோடி அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT