

சென்னையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
எர்ணாவூர் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ள கச்சா எண்ணெய் அகற்றும் பணியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த ஒரு வாரமாக கச்சா எண்ணெயை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் இப்பணி முடிவுக்கு வராததால், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. பொதுமக்களும் மீன் உணவை தவிர்த்து வருகின்றனர்.
இதனால் மீனவர்களின் வாழ் வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கான நிவார ணத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும் உலகில் உள்ள நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அப்பகுதியில் இயல்புநிலை திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று எர்ணாவூர் பாரதியார் நகர் கடற்கரைக்குச் சென்று, கச்சா எண்ணெய் வெளியேறியதால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் எண்ணெய் அகற்றும் பணிகளைப் பார்வையிட்டார்.