பொன்முடி மீதான வழக்கு ஜனவரி 24-க்கு ஒத்திவைப்பு

பொன்முடி மீதான வழக்கு ஜனவரி 24-க்கு ஒத்திவைப்பு
Updated on
1 min read

கடந்த தி.மு.க ஆட்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக, விழுப்புரம் லஞ்ச ஓழிப்பு போலீசார் கடந்த ஆண்டு அவரது வீடு மற்றும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்களைக் கைபற்றியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டி. எஸ்.பி குப்புசாமி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது பொன்முடியின் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்த வழக்கு வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி வெற்றிசெல்வி விடுமுறையில் சென்றிருப்பதால் வழக்கு ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஊழியர்கள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in