வியாசர்பாடி அருகே குழந்தை பலி: லாரிக்கு தீ வைப்பு

வியாசர்பாடி அருகே குழந்தை பலி: லாரிக்கு தீ வைப்பு
Updated on
1 min read

சென்னை வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகர் பகுதியில் நேற்று இரவு ஆந்திராவில் இருந்து வந்துகொண் டிருந்த லாரி ஒன்று, அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை மீது மோதியது. இதில், குழந்தை சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந் தது.

ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் லாரியை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் லாரி ஓட்டுநரை கைது செய் தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in