Last Updated : 22 Oct, 2013 12:08 PM

 

Published : 22 Oct 2013 12:08 PM
Last Updated : 22 Oct 2013 12:08 PM

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கற்களாலும், பாட்டில்களாலும் அடித்து விரட்டியடித்தால் மீனவர்கள் வெறுங்கையுடன் கரை திரும்பினர்.

ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடிக்க முயன்ற ஐந்து கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சங்கிலி போல அணிவகுத்து மீனவளை கற்களாலும், சோடா பாட்டில்களை கொண்டும் தாக்கி விரட்டி அடித்தாக கரை திரும்பிய மீனவர்கள் கூறினர்.

அச்சமடைந்த மீனவர்கள் மீன்பாடு இல்லாத பகுதிகளுக்கு சென்று சிலர் மீன்பிடித்தாகவும், சிலர் மீன்பிடிக்காமலேயே கரை திரும்பினர். இதனால் ஒவ்வொரு விசைப்படகுகிற்கும் ரூபாய் பத்தாயிரம் வரையிலும் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக கடலோர விசைப் படகு மீனவர்கள் சங்க பொது செயலாளர் போஸ்,

''தொடர்கதையாக நடைபெற்று வரும் மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு நாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும்

மேலும் இலங்கை சிறைகளில் வாடுகின்ற தமிழக மீனவர்களையும், தமிழக மற்றும் ஆந்திர சிறைச்சாலைகளில் உள்ள இலங்கை மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இல்லையெனில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் புறக்கணிப்போம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x