Published : 03 Jul 2016 10:21 AM
Last Updated : 03 Jul 2016 10:21 AM
தலைமைச் செயலகத்தில் எதிர் கட்சித் தலைவருக்கென ஒதுக்கப் பட்டுள்ள அறையை மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.
நேற்று பகல் 12.30 மணி அளவில் தலைமைச் செயலகத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். எதிர்க்கட்சித் தலைவ ருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்ற அவர், சிறிது நேரம் அங்கு ஆலோசனை நடத்தினர். பின்னர் வெளியே வந்த ஸ்டாலின், அங்கிருந்த நிருபர்களிடம் கூறும்போது, ‘‘திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையை விரிவுபடுத்தி சீரமைக்க வேண்டும் என்று ஏற் கெனவே கோரிக்கை விடுத்துள்ளோம்’' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT