தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் தனிச்சிறைக்கு மாற்றம்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் தனிச்சிறைக்கு மாற்றம்
Updated on
1 min read

இலங்கை உயர்நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் தூக்கு தண்டனை கைதிகளுக்கான தனிச்சிறைக்கு மாற்றப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாந்த் மற்றும் லாங்லெட் மற்றும் இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் கிறிஸ்துராஜா சீல்தன், ஞானப்பிரகாசம் துஷாந்தன் கமல கிறிஸ்ரியன் ஆகிய எட்டு பேரையும் போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கடந்த நவம்பர் 2011ல் கைது செய்தனர்.

கடந்த அக்டோபர் 30ம் தேதி இந்த 8 மீனவர்களுக்கும் தூக்குதண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக மீனவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக மீனவர்கள் 5 பேர் உட்பட தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 மீனவர்களும், கொழும்பு வெலிக்கடை சிறையில் தூக்கு தண்டனை கைதிகளுக்கான தனிச்சிறைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாற்றப்பட்டனர். இதனால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in