Published : 30 Mar 2014 12:53 PM
Last Updated : 30 Mar 2014 12:53 PM

ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்கு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அன்வர்ராஜா உள்பட 3 பேர் மீது அறந்தாங்கி காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அறந்தாங்கி தொகுதியில் மார்ச் 26-ம் தேதி அன்வர்ராஜா பிரச்சாரம் செய்தபோது, கூத்தாடிவயல் பகுதியில் நரிக்குறவர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்தனராம். இது குறித்து ராமநாதபுரம் தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியருமான துரை கொடுத்த புகாரின் பேரில் அன்வர்ராஜா, அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் கருப்பையா, முகம்மது ரபீக் ஆகிய 3 பேர் மீது அறந்தாங்கி போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x