

தமிழகம் முழுவதும் இரண் டாம் தவணையாக 67.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள் ளது. இன்னும் 2 நாட்களில் விடு பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 71 லட்சம் குழந்தை களுக்கான முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடை பெற்றது. மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக 1,000 நடமாடும் குழுக்கள் மற்றும் 3 ஆயிரம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.
போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெற்றது. பெற்றோர் ஆர்வமாக தங்களுடைய குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். விடுபட்ட குழந்தை களை கண்டுபிடிக்க, போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப் பட்டது. வேலை நிமித்தமாக இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக் கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
முன்னதாக நேற்று காலை 9 மணி அளவில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) க.குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) நாராயணபாபு, மருத்துவமனை இயக்குநர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) க.குழந்தைசாமி கூறும் போது, “தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 67.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள் ளது. நடமாடும் குழுக்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் முகாம் செயல்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம். கிராமப்புற செவிலியர்கள் வீடுவீடாக சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை போடுவார்கள்” என்றார்.
சென்னையில் 93 சதவீதம்
சென்னையில் 5 வயதுக்கு உட்பட்ட 6 லட்சத்து 738 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 6 லட்சத்து 56 ஆயிரத்து 937 குழந்தை களுக்கு (93.7 சதவீதம்) போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.