Published : 20 Jun 2015 08:17 AM
Last Updated : 20 Jun 2015 08:17 AM
தமிழகத்தில் வரும் செவ்வாய்க் கிழமை வரை ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. தமிழகத்தின் மற்ற இடங்களில் வெப்பச் சலனம் காரண மாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று திருநெல் வேலி மாவட்டம் தென்காசி, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் 4 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கோவை மாவட்டம் சின்னகலார் மற்றும் பொள்ளாச்சி, நீலகிரி மாவட்டம் தேவலா, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ஆகிய இடங்களில் 3 செ.மீ., திருநெல்வேலி மாவட் டம் பாபநாசம், திருவாரூர் மாவட் டம் குடவாசல், கடலூர் மாவட் டம் சிதம்பரம், சேத்தியாதோப்பு, பரங்கிப்பேட்டை மற்றும் தொழு தூர், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியிருந்தது. மேலும் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழை பதிவாகியிருந்தது.
தமிழகத்தில் செவ்வாய்க் கிழமை பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT