Published : 04 Nov 2014 09:37 AM
Last Updated : 04 Nov 2014 09:37 AM

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வங்கி தேர்வு எழுத இலவச பயிற்சி

சென்னையில் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வங்கி கிளார்க் தேர்வை எதிர்கொள்வதற்கான 3 நாள் பயிற்சி வரும் 7-ம் தேதி தொடங்குகிறது.

இது தொடர்பாக யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத் தப்பட்ட வகுப்பு பணியாளர் சங்க சார்பில் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

அரசுடமையாக்கப்பட்ட 19 வங்கிகளில் கிளார்க் பதவிக்கு சென்னையில் விண்ணப்பித்துள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினர் தேர்வை எதிர்கொள்வதற்கான 3 நாள் இலவச எழுத்து பயிற்சி எங்கள் சங்கம் சார்பாக நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள பெரியார் திடலில் வரும் 7 முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் வங்கி தேர்வு ஆணையத்துக்கு அனுப்பிய (IBPS) விண்ணப்பத்தின் நகலை aiobs.coaching@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 9381007998, 9445174128, 9444993844, 9176075253 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x