கார் விபத்து: அமைச்சர் சுந்தர்ராஜன் உயிர் தப்பினார்

கார் விபத்து: அமைச்சர் சுந்தர்ராஜன் உயிர் தப்பினார்
Updated on
1 min read

அமைச்சர் சுந்தர்ராஜன் காரின் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.கைத்தறித்துறை அமைச்சர் சுந்தர்ராஜன் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற விழாவிற்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

பரமக்குடி டான் பாஸ்கோ பள்ளி அருகே அமைச்சரின் கார் நின்று கொண்டிருந்த போது மதுரையில் இருந்து வந்த அரசு பேருந்து ஒன்று அமைச்சர் காரின் பின்புறமாக மோதியது. இந்த விபத்தில் காரின் பின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதில் அமைச்சர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

பின்னர் அமைச்சர் சுந்தர்ராஜன் விழாவிற்கு பாதுகாப்பு அதிகாரிகள் வந்த காரில் சென்றார். இந்த விபத்து குறித்து பரமக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in