Published : 24 Apr 2017 11:55 AM
Last Updated : 24 Apr 2017 11:55 AM
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி அடுத்துள்ள பாறைபட்டி அர்ச்சுனா நதியில் இருந்து சிலர் மணல் கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு எம்.புதுப்பட்டி போலீஸாரும், தனிப் பிரிவு போலீஸ் கணேசனும் நேற்று அதிகாலை சென்றனர். அப்போது, அர்ச்சுனா நதியில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் டிராக்டரை நிறுத்தாமல் ஓட்டுநர் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
அதையடுத்து, தனிப் பிரிவு போலீஸ் கணேசன் தனது மோட்டார் சைக்கிளில் டிராக்டரை முந்திச்சென்று சாலையின் குறுக்கே நிறுத்தி உள்ளார். பதற்றமடைந்த டிராக்டர் ஓட்டுநர் கீழே குதித்து தப்பியோடினார்.
இதனால் டிராக்டர் தனிப் பிரிவு போலீஸ் கணேசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இருப்பினும் கணேசன் உயிர் தப்பினார்.இது குறித்து எம்.புதுப் பட்டி போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து டிராக்டர் உரிமையாளர் பாறைபட்டியைச் சேர்ந்த மகாலிங்கத்திடம் விசாரணை நடத்தினர். டிராக்டர் ஓட்டுநரை தேடிவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT