Published : 18 Apr 2017 11:47 AM
Last Updated : 18 Apr 2017 11:47 AM
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் வழக்கறிஞர்களுடன் நடத்திய ஆலோசனை முடிவுற்றது.
அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழங்கியதாக டிடிவி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேவேளையில், லஞ்சம் பெற்றதாக டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
டி.டி.வி தினகரன் எந்த நேரமும் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) டி.வி.வி. தினகரன் தனது வழக்கறிஞர்கள் ஜீனனேசன், குமார் உள்ளிட்டோருடன் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
சுமார் ஒரு மணி நேரம் வரையில் நடந்த இச்சந்திப்பு முடிவுற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT