Published : 21 Aug 2016 10:07 AM
Last Updated : 21 Aug 2016 10:07 AM

ரசாயன வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதி கிடையாது: மாசு கட்டுப்பாடு வாரியம் திட்டவட்டம்

ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண் டாடும்போது நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப் பட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். மாசு கட்டுப்பாடு வாரிய விதிகளின்படி சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத, எவ்வித ரசாயன கலவையும் கலக்கப்படாத, ஜவ்வரிசி தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களை கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலை கள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீரில் கரையும் தன்மையுடைய, தீங்கு விளைவிக்காத இயற்கை வண்ணங்களைக் கொண்ட விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x