Published : 06 Jun 2017 09:46 AM
Last Updated : 06 Jun 2017 09:46 AM

போக்குவரத்துக் கழகங்களில் இந்த ஆண்டுக்குள் 4000 பேர் ஓய்வு: பஸ் சேவை பாதிக்கும் - அரசு நடவடிக்கை எடுக்குமா?

போக்குவரத்துக் கழகங்களில் இருந்து நடப்பு ஆண்டில் சுமார் 4 ஆயிரம் பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர். எனவே, போதிய அளவில் ஆட்களைப் பணி அமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத் துத் துறையின்கீழ் சென்னை, விழுப்புரம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமார் 22,399 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டு தோறும் கணிசமான அள வுக்கு புதிய பஸ்கள் வாங்கப் படுகின்றன. இருப்பினும் பஸ்கள் முழுமையான பராமரிப்பு இல்லா மல் இயக்கப்படுகின்றன.

1985-ல் பணியில் சேர்ந்தவர்கள்

6 ஆண்டுகளை கடந்து இயக்கப் படும் அரசு பஸ்கள் அடிக்கடி பிரேக் டவுன் ஆகின்றன. பல அரசு பஸ்களின் ஜன்னல்கள் உடைந்த நிலையிலும், கதவுகள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையிலும் இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இதற்கிடையே, கடந்த 1985-ம் ஆண்டு போக்குவரத்துக் கழகங் களில் பணிக்கு சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு ஓய்வு பெறுகின்றனர். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 2,500 பேர் உட்பட சுமார் 4 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, ஆட்கள் பற்றாக்குறையை தவிர்க்க அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

ஓட்டுநர், நடத்துநர் 2,500 பேர்

இது தொடர்பாக அரசு போக்கு வரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசு போக்குவரத் துக் கழகங்களில் ஆண்டுதோறும் 1,000 முதல் 1,800 ஊழியர்கள் ஓய்வு பெறுவார்கள். ஆனால், இந்த ஆண்டில் சுமார் 4 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவார்கள் என கணக்கிட் டுள்ளோம். இதில், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மட்டுமே சுமார் 2,500 பேர் இருப்பார்கள். இது தொடர் பான அறிக்கையை தமிழக அரசிட மும் அளித்துள்ளோம். எனவே, மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும், புதிய ஆட்களைத் தேர்வு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

ஊழியர்கள் பற்றாக்குறை

இது தொடர்பாக தொமுச பொரு ளாளர் கி.நடராஜன் கூறியதாவது:

போக்குவரத்துக் கழகங்களில் காலம் கடந்த பழைய பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்க ளும், ஊழியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே, பஸ்களின் இயக்கத்துக்கு ஏற்ப ஊழியர்கள் இல்லாத நிலை உள்ளது.

போக்குவரத்துத் துறையில் ஆண்டுதோறும் சுமார் 3,000 பேர் ஓய்வு பெறுவார்கள். ஆனால், இந்த ஆண்டு கூடுதலாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் வேண்டும்

கடந்த 2016 ஜனவரிக்கு பிறகு புதிய ஆட்களை நிர்வாகம் நியமிக்கவில்லை. எனவே, பழைய பஸ்களை நீக்கி புதிய பஸ்களை சேர்க்கவும், போதிய அளவில் பணியாளர் நியமனம் செய்யவும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே, போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2016 ஜனவரிக்கு பிறகு புதிய ஆட்களை நிர்வாகம் நியமிக்கவில்லை. எனவே, பழைய பஸ்களை நீக்கி புதிய பஸ்களை சேர்க்கவும், போதிய அளவில் பணியாளர் நியமனம் செய்யவும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x