Published : 19 Jun 2016 08:03 AM
Last Updated : 19 Jun 2016 08:03 AM

ஜேப்பியார் காலமானார்

சத்தியபாமா பல் கலைக்கழகத்தின் வேந்தரும் ஜேப்பி யார் கல்வி அறக் கட்டளை தலைவ ருமான ஜேப்பி யார் நேற்று சென்னை யில் காலமானார். அவருக்கு வயது 85.

சென்னையை அடுத்த சோழிங்க நல்லூரில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று காலமானார்.

ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை ஆரம்பித்து பல கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார். சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருந்து வந்தார்.

நாகர்கோவில் முட்டத்தில் பிறந்த அவர், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் அதிமுக செயலாளராக பதவி வகித்தார். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சட்ட மேலவையின் அதிமுக கொறடாவாகவும் பதவி வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x