ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகை

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகை
Updated on
1 min read

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு இந்த மாதம் 6-ம் தேதி ஆகியும் ஓய்வூதியம் கிடைக்காததால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மாதத்துக் கான ஓய்வூதியத்தை உடனே வழங்கக் கோரி பல்லவன் இல்லம் அருகே ஓய்வு பெற்ற ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகைப் போராட்டம் நடத்தி னர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘போக்கு வரத்து துறையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போதிய நிதி ஒதுக்கக் கோரி தமிழக அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும் போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள், போக்குவரத்து அதிகாரிகள் இடையே இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது வரும் 11-ம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்கப்படும் என உறுதியளிக் கப்பட்டுள்ளது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in