Published : 15 Feb 2017 09:40 PM
Last Updated : 16 Jun 2017 12:31 PM
எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் என இருவருக்கும் அடுத்தடுத்து சந்திப்பதற்கான அனுமதியை ஆளுநர் அளித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், இரவு 7.45 மணியளவில் வேலுமணி, டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் 10 பேர் ஆளுநரை சந்தித்தனர். அப்போது, ஆட்சியமைக்க விரைவில் அழைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் கோரினர்.
தொடர்ந்து, 8.45 மணிக்கு பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்தித்தார். ஆளுநரிடம் ''பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்'' என்ற கோரிக்கையை ஓபிஎஸ் முன்வைத்தார். அதற்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், விரைவில் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!