Published : 02 Jul 2016 08:07 AM
Last Updated : 02 Jul 2016 08:07 AM

பொதுவிநியோக தி்ட்டத்துக்காக ரூ.523 கோடியில் 46 ஆயிரம் டன் துவரை, உளுந்து கொள்முதல்: உணவுத்துறை ஒப்பந்தம் கோரியது

தமிழகத்தில் சிறப்பு பொதுவிநி யோக தி்ட்டத்துக்காக ரூ. 523.14 கோடியில், 46 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு, உளுந்து ஆகிய வற்றை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 1.97 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, சிறப்பு பொதுவிநியோக திட்டத்தின் கீழ், மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு , உளுந்து மற்றும் ஒரு லிட்டர் பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

இதில், துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகியவை ரூ.30, பாமாயில் ரூ.25 என்ற மானிய விலைகளில் வழங்கப்படுகிறது.

இதற்காக ஒவ்வொரு மாதமும் 13 ஆயிரத்து 450 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 7 ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்து, 15 ஆயிரம் கிலோ லிட்டர் செறிவூட்டப்பட்ட பாமாயில் ஆகியவை தேவைப்படுகிறது.

இந்நிலையில், தற்போது, ரூ.207 கோடியே 62 லட்சம் மதிப்பில் 14 ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்து மற்றும், ரூ.315 கோடியே 52 லட்சம் மதிப்பில் 32 ஆயிரம் மெட்ரிக் டன் கனடா மஞ்சள் லெண்டில் பருப்பும் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியுள்ளது. தற்போது துவரம் பருப்புக்கு மாற்றாக கனடா மஞ்சள் லெண்டில் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x