

ஜல்லிக்கட்டு தடைகளை நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்ததற்காக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில், 'ஆளுநர் வித்யாசாகர் ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டுக்கான தடைகளை நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.