Published : 08 Feb 2017 05:25 PM
Last Updated : 08 Feb 2017 05:25 PM

இன்னும் முடிவு செய்யவில்லை: ஓபிஎஸ் அழைப்புக்கு தீபா பதில்

முதல்வர் பன்னீர்செல்வம் தன்னுடன் இணைந்து அரசியல் பணியாற்ற விடுத்த அழைப்பு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று (புதன்கிழமை) காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், " ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் முன்வந்து ஆதரவு தெரிவித்தால் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்" எனக் கூறியிருந்தார்.

இது குறித்து இன்று சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் பேட்டியளித்த தீபா ஜெயக்குமார், "முதல்வர் ஓபிஎஸ் அழைத்து விடுத்துள்ளதை ஊடகங்களில் பார்த்தே தெரிந்து கொண்டேன்.

முதல்வர் பன்னீர்செல்வம் தன்னுடன் இணைந்து அரசியல் பணியாற்ற விடுத்து அழைப்பு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர்கள் தரப்பில் இருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

பிப்ரவரி 24-ம் தேதி என்னுடைய முடிவை அறிவிப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். என்னைப் பற்றி வரும் யூகங்களை யாரும் நம்பவேண்டாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x