Published : 17 Mar 2017 09:00 AM
Last Updated : 17 Mar 2017 09:00 AM

தமிழக பட்ஜெட் 2017 - 18: குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.610 கோடியில் பணி

தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவமழை 62 சதவீதம் குறைந்துள்ளது இதனால் நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைந் துள்ளது. சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங் களின் கொள்ளளவில் 10 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

இந்த வறட்சியான சூழ் நிலையை சமாளிக்க, புதிய ஆழ் துளை கிணறுகள் அமைப்பது, ஏற்கெனவே உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளைப் புதுப்பித்து, விசை பம்புகளை மாற்றுதல் மற்றும் தேவையான பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்தல் போன்ற பணிகளை கிராமப்புறங்களில் ரூ.460 கோடி, நகர்ப்புறங்களில் ரூ.150 கோடி என மொத்தம் ரூ.610 கோடியில் அரசு செய்து வருகிறது.

இந்த வறட்சியான சூழ் நிலையை சமாளிக்க, புதிய ஆழ் துளை கிணறுகள் அமைப்பது, ஏற்கெனவே உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளைப் புதுப்பித்து, விசை பம்புகளை மாற்றுதல் மற்றும் தேவையான பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்தல் போன்ற பணிகளை கிராமப்புறங்களில் ரூ.460 கோடி, நகர்ப்புறங்களில் ரூ.150 கோடி என மொத்தம் ரூ.610 கோடியில் அரசு செய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x