Published : 30 Jan 2014 12:00 AM
Last Updated : 30 Jan 2014 12:00 AM

சென்னையில் பெண் ரவுடிகள் மோதல்: 4 பேர் கைது

பெண் ரவுடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மற்றொரு பெண் ரவுடி, அவரது மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சூளைமேட்டில் செவ்வாய்க்கிழமை ஸ்டெல்லா என்ற பெண் ரவுடி அரிவாளால் வெட்டப்பட்டார். ஆட்டோவில் வந்த 4 பேர் கும்பல் அவரை வெட்டியதில், ஸ்டெல்லாவின் தலையில் 3 இடங்களிலும், முகம், தாடை, மற்றும் வலது கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது.

ஸ்டெல்லாவுக்கும் வியாசர்பாடி எம்.எஸ்.முத்து நகரை சேர்ந்த இன்னொரு பெண் ரவுடியான கண்ணகிக்கும் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வருகிறது. லாரிகளை வாடகைக்கு விட்டு தொழில் செய்வதில் இவர்களுக்குள் மோதல் ஆரம்பித்தது. ஸ்டெல்லாவின் கணவர் ராஜூவை, கண்ணகி ஆட்களை ஏவி வெட்டிக் கொன்றார். இதற்கு பழிக்குப் பழி வாங்கும் வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கண்ணகியின் கணவர் விஸ்வநாதனை, ஸ்டெல்லா கொலை செய்தார். இந்த வழக்கில் கைதாகி சிறை சென்ற ஸ்டெல்லா சமீபத்தில்தான் வெளியில் வந்தார்.

இந்நிலையில் கண்ணகியின் மகன் வினோத்குமார் (25), அவரது கூட்டாளிகள் ராஜேஷ் (24), உஷேன் (24) ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஸ்டெல்லாவை வெட்டிக் கொல்ல முயன்றுள்ளனர். கண்ணகி உள்பட 4 பேரையும் சூளைமேடு போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x