Published : 28 Mar 2017 09:05 AM
Last Updated : 28 Mar 2017 09:05 AM

அதிமுகவின் இரு அணியினரும் ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா: தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் திமுக புகார்

ஆர்.கே.நகரில் அதிமுகவின் இரு அணியினரும் பணப் பட்டு வாடா செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் திமுக சட்டப் பிரிவு செயலாளர் இரா.கிரிராஜன் மனு அளித்துள்ளார்.

இடைத்தேர்தல் நடக்க இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி யில் பணம் பட்டுவாடா செய்யப் படுவதாக, தமிழக தலைமை தேர் தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்க திமுக சட்டப் பிரிவு செயலாளர் இரா.கிரிராஜன் நேற்று தலைமைச் செயலகத்துக்கு வந்தார். அங்கு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இல்லாததால் அவரது அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் இரு அணியினரும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். அதிமுக (அம்மா) வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்களே பணம் கொடுக்கின்றனர். வாக்காளர் அட்டையை பெற்றுக் கொண்டு பணம் வழங்கி வருகின்றனர். பல இடங்களில் பணம் கொடுக் கும்போது அவர்களை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத் தோம். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆர்.கே.நகர் வாக்காளர்களை தொகுதிக்கு வெளியே பெரம்பூர் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து பணம் விநியோகம் செய்கின்றனர்.

ஆர்.கே.நகரில் எங்கு பார்த் தாலும் ஆளுங்கட்சியின் வாகனங் கள் அணி வகுக்கின்றன. வெளி யூர்களில் இருந்து பல ஆயிரம் பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதா, பறக்கும் படையினர் வாகனங்களை சோதனை செய்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.

எனவே, நேர்மையான, சுதந்திர மான தேர்தலை நடத்த வாக் காளர்களுக்கு பணம் கொடுக்கப் படுவதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். தவறு களை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய இரா.கிரிராஜன், ‘‘ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளுங்கட்சி யினர் பணபலம், அதிகார பலத்தை வெளிப்படையாகவே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஆனால், இதனைத் தடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக எம்.பி.க்கள் நேரில் புகார் தெரிவிக்க உள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x