Published : 20 Nov 2014 10:53 AM
Last Updated : 20 Nov 2014 10:53 AM

சாமியார் ராம்பால் ஜாமீன் மனு நிராகரிப்பு

ஹரியாணாவில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாமியார் ராம்பால் (63) ஜாமீன் மனுவை பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சாமியார் ராம்பால், போலீஸாரால் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.

கடந்த 2 நாட்களாக பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டு போலீஸில் சிக்காமல் ஆசிரமத்தில் தங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்து ஆம்புலன்ஸ் மூலம் சண்டீகருக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பிற்பகல் 2 மணிக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x