Published : 23 Nov 2014 11:40 AM
Last Updated : 23 Nov 2014 11:40 AM

அதிக கட்டணம்: 400 ஆட்டோக்கள் பறிமுதல்

சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 1,100 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 400 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று போக்குவரத்து துறையினரும் போலீஸாரும் இணைந்து சோதனை நடத்திவருகின்றனர். இதுகுறித்து கேட்டபோது போக்குவரத்து ஆணைய அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக கட்டணம் வசூல், விதிமுறைகள் மீறல், ஆவணங் கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை போக்குவரத்து துறையினர், போலீஸார் இணைந்து செய்துவருகிறோம். விதிமுறை மீறல், அதிக கட்டணம் வசூல் கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.2,500 வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 1,100 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 400 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x