Published : 06 Jul 2016 08:49 AM
Last Updated : 06 Jul 2016 08:49 AM

புதிய மாநிலத் தலைவர் யார்?- தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் 2-வது நாளாக ஆலோசனை

புதிய மாநிலத் தலைவர் நியமனம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் அக்கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி 2-வது நாளாக நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், புதிய தலைவர் இதுவரை நியமிக்கப்படவில்லை.

மாநிலத் தலைவர் பதவியை கைப்பற்ற திருநாவுக்கரசர், செல்லக்குமார், ஜெயக்குமார், மாணிக் தாகூர், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், எச்.வசந்தகுமார் என பலரும் டெல்லியில் முகாமிட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர். இளங்கோவன் ஆதரவு மாவட்டத் தலைவர்கள், கடந்த வாரம் சோனியா காந்தியை சந்தித்து பீட்டர் அல்போன்ஸை தலைவராக்க வேண்டும் என வலியுறுத்தினர். பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலை வர்களிடமும் சோனியா ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய ராகுல் காந்தி, புதிய தலைவர் நியமனம் தொடர்பாக திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், மாணிக் தாகூர், ஜெயக்குமார், கோபிநாத் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு பீட்டர் அல்போன்ஸ், விஜயதரணி, செல்லக்குமார், வசந்தகுமார் ஆகியோ ரிடம் ஆலோசனை நடத்தினார். புதிய தலைவராகயாரை நியமிக்கலாம் என கருத்துக்களை கேட்டதாக ஆலோசனை யில் பங்கேற்ற தலைவர் ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x