Published : 04 Jan 2014 04:36 PM
Last Updated : 04 Jan 2014 04:36 PM
மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை உயர்வை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வாசன், சிலிண்டர் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை என தெரிவித்தார்.
மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ. 220 அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விலை நிலவரப்படி இந்த விலை உயர்வு கடந்த புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
இந்த விலை உயர்வுக்கு தமிழக முதல்வர் ஜெயல்லிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT