Published : 09 Sep 2016 08:29 AM
Last Updated : 09 Sep 2016 08:29 AM

மின்சார ரயில் மோதி பலியான 4 பேரின் அடையாளம் தெரிந்தது

சென்னை நுங்கம்பாக்கம் - சேத்துப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் மின்சார ரயில் மோதியதில், 4 இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை ரயில்வே போலீஸார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அவரும் வழியிலேயே இறந்துவிட்டார்.

ரயில்வே போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ரயில் மோதி இறந்த 4 பேரும் ஒடிசா மாநிலம் கோரபுட் மாவட்டம் போரிகும்மா பகுதியைச் சேர்ந்த கேசப்ஜானி (எ) கைரு, பாஸ்கர் ஜானி, கோர்கா முடாலி, குமார் குல்தீப் என தெரியவந்தது. இவர்கள், கடந்த மாதம் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை எழும்பூர் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x