Published : 11 Mar 2017 09:50 AM
Last Updated : 11 Mar 2017 09:50 AM

அன்னவாசல் ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி: காளைகள் முட்டியதில் 51 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் ஒருவர் பலியானார். மேலும், 51 பேர் காயமடைந்தனர்.

அன்னவாசல் விருத்தபுரீஸ் வரர் கோயில் மாசித் திருவிழாவை யொட்டி, நேற்று நடைபெற்ற ஜல்லிக் கட்டை ஆட்சியர் சு.கணேஷ் தொடங்கி வைத்தார். மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் உள் ளிட்டோர் கண்டுகளித்தனர்.

ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 337 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. அப்போது, காளைகளை அடக்க முயன்ற நூற் றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர் களில், காளைகள் முட்டி 52 பேர் காயமடைந்தனர். இதில், படுகாய மடைந்த குன்னத்தூரைச் சேர்ந்த ம.பன்னீர்செல்வம்(25) மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, காளை கள் வெளியேறும் பகுதியில் ஏராள மான பார்வையாளர்கள் திரண்ட னர். இதனால், அவிழ்த்து விடப்பட்ட காளைகள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இத னால், ஜல்லிக்கட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.லோகநாதன் நிறுத்தினார். கூட்டத்தினரை போலீஸார் அங்கிருந்து அகற்றிய பிறகு, ஜல்லிக்கட்டு மீண்டும் தொடங்கி, நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x