Published : 03 Nov 2014 09:54 AM
Last Updated : 03 Nov 2014 09:54 AM

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா - வங்கி, மாதிரி வினா விடை புத்தகம் நவ.10 முதல் விற்பனை

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான வினா-வங்கி, மாதிரி வினா விடை புத்தகங்கள் நவம்பர் 10-ம் தேதி முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித் துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் வினா-வங்கி, மாதிரி வினா-ஏடுகள் மற்றும் தீர்வு புத்தகங்களை ஆண்டுதோறும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் விற்பனை செய்ய உள்ளது.

12-ம்வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் ஒவ்வொரு பாடவரிசைக்கும் ரூ.25 முதல் ரூ.95 வரையிலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 புத்தகங்கள் கொண்ட ஒரு தொகுதியின் விலை ஆங்கிலவழி ரூ.200-ம், தமிழ்வழி ரூ.205-ம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் 10-ம் தேதி முதல் அவை விற்பனை செய்யப்படும். மாவட்ட வாரியான விற்பனை மையங்கள் விவரம் வருமாறு:-

சென்னை:

1. அரசு மேல்நிலைப்பள்ளி, எம்எம்டிஏ காலனி, அரும்பாக்கம் 2. ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை 3. ஈ.எல்.எம். பேப்ரிசியஸ் மேல்நிலைப்பள்ளி, புரசைவாக்கம் 4. எம்சிசி மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு 5. ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு.

காஞ்சிபுரம்:

அரசு மேல்நிலைப் பள்ளி, பீர்க்கன்கரணை.

திருவள்ளூர்:

ஆர்எம் ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்

கடலூர்:

அரசு மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம்.

விழுப்புரம்:

ராமகிருஷ்ணா வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பூந்தோட்டம், விழுப்புரம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x