Published : 01 Mar 2017 08:55 AM
Last Updated : 01 Mar 2017 08:55 AM
‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். மே மாதம் 7-ம் தேதி இத்தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்துக்கு இத்தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா என்று தெளிவாக தெரியாததால், மாணவர்கள் விண்ணப்பிப்பது நல்லது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) நடைபெற உள்ளது. கடந்த ஜனவரி 31-ம் தேதி முதல் மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். வரும் மே மாதம் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் இத்தேர்வு நடைபெற உள்ளது.
‘நீட்’ தேர்வு தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “நீட் தேர்வில் இருந்து தமிழக அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெற சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்குமா கிடைக்காதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனவே மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிப்பது நல்லது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT