Published : 17 Jun 2016 08:12 AM
Last Updated : 17 Jun 2016 08:12 AM

இலங்கை கடற்படையினரால் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 3 பேர் கைது

கோட்டைப்பட்டினம் மீன்பிடித் தளத்தில் இருந்து நேற்று முன்தினம் 220 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு பகுதியில், ஜோசப் அருள், மைதீன்கான், யு.பாக்கியம் ஆகியோர் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய் யப்பட்ட அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் வலியுறுத்திய 2 நாட்களிலேயே, 3 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 மீனவர்களின் காவல் நீட்டிப்பு

கடந்த 2-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத் தைச் சேர்ந்த 4 மீனவர்கள், 5-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 4 மீன வர்களை இலங்கை கடற்படை யினர் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த மீனவர்கள் 8 பேரின் காவல் நேற்றுடன் நிறை வடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தமிழக மீனவர்களை விசாரித்த நீதிபதி மகேந்திர ராஜா, 2-வது முறையாக ஜூன் 30-ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x