Published : 02 Dec 2013 07:40 AM
Last Updated : 02 Dec 2013 07:40 AM

சென்னையில் இன்று முதல் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்

தமிழகத்தில் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சென்னையில் இன்று முதல் இரண்டு மணி நேரம் சுழற்சி முறையில் மின் வெட்டு அமலுக்கு வருகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 2,500 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக எட்டு மணி நேரத்துக்கும் மேல் மின் வெட்டு இருந்துவந்தது.

இந்நிலையில் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, சென்னையிலும் இன்று முதல் இரண்டு மணி நேர மின் வெட்டை அமல்படுத்த உள்ளதாக, மின்வாரியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மற்ற மாவட்டங்களில் சுமார் இரண்டு மணி நேரம் வரை மின்வெட்டைக் குறைக்க முடியும் என்று மின் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x