Published : 21 Jan 2017 08:40 PM
Last Updated : 21 Jan 2017 08:40 PM

தமிழக சட்டப்பேரவை திங்கட்கிழமை கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 23-ம் தேதி (திங்கட்கிழமை) கூடுகிறது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும். மறுநாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் ஜல்லிக்கட்டு, வறட்சி, விவசாயிகள் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு

ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழக அரசு சனிக்கிழமை அவசர சட்டம் கொண்டு வந்தது. அதற்குப் பிறகும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்கள் நிரந்தரத் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், முதல்வர் ஓபிஎஸ் ''அவசர சட்டத்துக்கு மாற்றாக வரும் 23-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்'' என்று உறுதி அளித்தார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்ததரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x