Published : 08 Jan 2017 10:10 AM
Last Updated : 08 Jan 2017 10:10 AM
அதிமுக முன்னாள் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் சசிகலாவுடன் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற சசிகலா கடந்த 4-ம் தேதி முதல், பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, அதிமுக முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT