Published : 25 Apr 2017 07:43 AM
Last Updated : 25 Apr 2017 07:43 AM
முழு அடைப்புப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர் கள் உடனே கைது செய்யப்படு வார்கள் என்று டிஜிபி டி.கே.ராஜேந் திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்து கின்றன. இதில் ஆளும் கட்சியான அதிமுக பங்கேற்கவில்லை. இத னால் பேருந்துகள் வழக்கம்போல ஓடும் என்று தமிழக அரசு அறிவித் துள்ளது. பேருந்துகள், கடைகள் மீது தாக்குதல் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து பணிமனைகள் முன்பு இன்று காலை முதலே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். பிரச்சினைக்குரிய இடங் களில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடைகள், பேருந்துகள் மீது தாக்குதல் நடத்து பவர்கள், வியாபாரிகளை மிரட்டி கடைகளை அடைக்கச் சொல்பவர் கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார் கள் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் 13 ஆயிரம் போலீ ஸார் உட்பட தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT