Published : 22 Nov 2014 10:17 AM
Last Updated : 22 Nov 2014 10:17 AM

டிச.8-ல் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம்

மதிமுக உயர்நிலைக் குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது என கட்சி யின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம், அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை யில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவல கமான தாயகத்தில் டிசம்பர் மாதம் 8-ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள், ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோ சனைக்குழு மற்றும் அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x