Published : 26 Aug 2016 09:54 AM
Last Updated : 26 Aug 2016 09:54 AM

ஒரே நாளில் குறுக்கிடும் அரசுத் துறைத் தேர்வுகள்: தேதியை மாற்றி அறிவிக்க வலியுறுத்தல்

வரும் 27, 28 ஆகிய தேதிகளில் அர சின் 2 துறைகள் சார்பில் போட்டித் தேர்வுகளும், 28-ம் தேதி தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சர் தேர்வும் நடைபெற வுள்ளன. இதில், ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகளுக்கு விண்ணப் பித்தவர்கள், தேர்வு தேதிகள் குறுக்கிடுவதால் ஏதாவது ஒரு தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்த பிரகதீஸ்வரன், ‘தி இந்து உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு கூறியதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இளநிலை உதவியாளர் (கணக்கு), டெஸ்டர் கெமிக்கல், கள உதவியாளர் (பயிற்சி), சுருக்கெழுத்தர்- தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு 27-ம் தேதி யும், இளநிலை உதவியாளர் (நிர் வாகம்), தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்/ இயந்திரவியல்) ஆகிய பணியிடங்களுக்கு 28-ம் தேதியும் போட்டித் தேர்வு நடை பெற உள்ளது.

அதேபோல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நீதிபதிகள், நீதிமன்றப் பதிவாளர் ஆகியோரின் நேர்முக உதவியாளர் மற்றும் நீதிமன்ற துணைப் பதிவாளரின் நேர்முக எழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு வரும் 27-ம் தேதியும், இதே துறையில் கணினி இயக்குவோர், தட்டச்சர், காசாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் 28-ம் தேதியும் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இவை தவிர, தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் 27, 28 ஆகிய தேதிகளில் தட்டச்சர் தேர்வு நடத்தப்பட உள்ளது.

தட்டச்சர், மின் வாரியத்தின் இளநிலை உதவியாளர் தேர்வு களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 2 தேர்வுத் தேதிகளும் ஒரே நாளில் வருவதால் எந்தத் தேர்வில் பங்கேற் பது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வு தேதிகளை அரசு மாற்றி அறிவித்தால் உதவியாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x