Published : 07 Oct 2014 08:01 PM
Last Updated : 07 Oct 2014 08:01 PM

சட்டம் - ஒழுங்கை அரசு கட்டுப்படுத்த எதிர்பார்க்கிறேன்: கருணாநிதி பேட்டி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை மாநில அரசு கட்டுப்படுத்தும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்தும், அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்:

"தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை கட்டுப்படுத்த முடியாமல் இருக்குமேயானால், அதைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள், கட்டுப்படுத்துவார்கள்; அது அவர்களுடைய கடமை.

அவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். எதிர்பார்ப்பதில் தவறில்லை" என்றார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x