Published : 29 Mar 2017 09:34 AM
Last Updated : 29 Mar 2017 09:34 AM
காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று மாலை கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங் கேற்றோர், காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத் துக்கு மத்திய அரசு அனுமதி யளித்ததற்கு கண்டனம் தெரிவித் தும், இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். இதில், தமுமுக மாவட்டச் செய லாளர் அப்துல் ரஹீம் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
காரைக்கால் வட்டாட்சியர் பொய்யாதமூர்த்தி மற்றும் காவல் துறையினர் கடற்கரைக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT