Published : 21 Jun 2016 08:43 AM
Last Updated : 21 Jun 2016 08:43 AM
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் மாஃபா பாண்டிய ராஜன் (ஆவடி) புள்ளி விவரங்களுடன் பேசியதை முதல்வர் ஜெயலலிதா வெகுவாக ரசித்துக்கேட்டார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத் தில் பேசிய பாண்டியராஜன், கடந்த 5 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனைகளை புள்ளிவிவரங்களுடன் பட்டிய லிட்டார். அரசு நிர்வாகத் திறமையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் 2023-ன் இலக்குகளை 2021-லேயே தமிழக அரசு எட்டிவிடும். தமிழக அரசின் நிதிநிலை நல்ல நிலையில் இருப்பதாலேயே உலக வங்கி கடன் கொடுக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் துறையில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலையில் இருக்கிறது என பேசினார்.
30 நிமிடங்கள் அவரது பேச்சை முழுமையாக கேட்ட முதல்வர் ஜெயலலிதா, பல முறை மேஜையைத் தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT