Published : 05 Apr 2017 08:53 AM
Last Updated : 05 Apr 2017 08:53 AM

மொரப்பூர் அருகே ரயில் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவம்: கொள்ளையர்களைப் பிடிக்க 2 தனிப்படை தீவிரம்

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே நடந்த ரயில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் 2 தனிப்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கேரள மாநிலம் திருவனந்தபுரத் தில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் தருமபுரி மாவட்டம் மொரப்பூரை கடந்து சென்றபோது சிக்னல் கிடைக்காமல் நின்றது. அப்பகுதி யில் ரயில்வே சிக்னலுக்கான மின் பாதையை சேதப்படுத்தி சிக்னலை மாற்றி அமைத்து ரயில் நிறுத்தப்பட்டதும், அந்த சந்தர்ப் பத்தை பயன்படுத்தி ரயில் பயணி கள் 5 பேரிடம் நகை, செல்போன் ஆகியற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் கேரளா வைச் சேர்ந்த 3 பேர், தமிழகம், ஆந்திராவைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 5 பேரிடம் 17 பவுன் நகை மற்றும் 1 செல்போனை மர்ம கும்பல் பறித்துச் சென்றிருந்தது. இவர்கள் இதுதொடர்பாக ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள ரயில்வே காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், கொள்ளை யர்களைப் பிடிக்க ரயில்வே பாது காப்பு காவல்துறை சார்பில் 2 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. ஏற்கெனவே சேலம் ரயில்வே காவல்நிலைய ஆய்வாள ராக பணியாற்றி தற்போது நாமக்கல் மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு ஆய்வாளராக பணியாற்றும் மணிகண்டன், தற்போதைய சேலம் ரயில்வே காவல்நிலைய ஆய்வாளர் இளவரசி ஆகியோர் தலைமையில் இந்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தீவிர நடவடிக்கை

ஆய்வாளர் மணிகண்டன் ஏற்கெனவே ரயிலில் நடந்த கொள்ளை சம்பவங்களில் திறமை யாக செயல்பட்டவர் என்பதால் இந்த வழக்குக்காக அவரை ரயில்வே காவல்துறையினர் பிரத்தியேகமாக கேட்டுப் பெற்றுள் ளனர்.

இந்த 2 தனிப்படையினரும் கொள்ளையர்களை கைது செய் யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் 4 பேர் அடங்கிய கும்பல் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவர் என ரயில்வே காவல்துறையைச் சேர்ந்த சிலர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x