

இலங்கை வசம் உள்ள 11 மீனவர்கள், 135 படகுகளை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக மீனவர்களின் நீண்டநாள் வாழ்வாதார பிரச்சினை தொடர்பாக தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். கடந்த 2015-ம் ஆண்டில் 61 படகுகள், 2016-ல் 53 மற்றும் இந்த ஆண்டில் 21 என இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின்135 படகுகள் மீட்கப்படாமல் உள்ளன. கைது செய்யப்படும் மீனவர்களை விடுவித் தாலும், அவர்களது படகுகளை இலங்கை அரசு விடுவிப்பதில்லை. இதன்மூலம் மீனவர்களின் வாழ்வா தாரம் பறிக்கப்பட்டு, அவர்கள் வறுமையில் தள்ளப்படுகின்றனர்.
மீனவர்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்களை விரைவாக மீட்க வும், அவற்றை பயன்படுத்தும் வகை யில் சீரமைத்து மீனவர்களுக்கு வழங்கவும் தேவையான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு கிறேன்.
நீண்டகாலமாக பயன்பாடின்றி கடலில் நிறுத்தி வைத்திருப்பதால் வெயில், பருவமழை உள்ளிட்டவற் றால் சீரமைக்க முடியாத அளவுக்கு படகுகள் பழுதடைந்து வருவது பல முறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படகுகளை விடுவிப்பதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்ட போதும், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே, இந்த விஷயத்தில் தாங் கள் தலையிட்டு இலங்கை அரசுடன் பேசி 135 படகுகளையும், இலங்கை சிறையில் உள்ள 11 மீனவர்களையும் விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.